ஆசிரம பெண் கற்பழிப்பு: 2 வாலிபர்கள் கைது!!

Read Time:1 Minute, 36 Second

1d52837d-c70c-4f53-ad5b-56e497bda98d_S_secvpfபுதுவை அரவிந்தர் ஆசிரம பெண் ஹேமலதா (வயது 39). இவர் தனது சகோதரிகள் மற்றும் பெற்றோருடன் கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள காலாப்பட்டு கடற்கரைக்கு சென்றபோது தன்னை 2 பேர் கற்பழித்ததாக காலாப்பட்டு போலீசில் புகார் செய்திருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சம்பவம் நடந்த அன்று அதிகாலை அப்பகுதியில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் யார்? யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ள நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக தமிழக பகுதியான பிள்ளைச்சாவடியை சேர்ந்த ராஜா (35), விஜயகுமார் (33) ஆகிய 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரமபெண் ஹேமலதாவை அவர்கள் கற்பழித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பி.கே – விமர்சனம்!!
Next post அரசு ஆஸ்பத்திரியில் நர்சுக்கு கத்திக் குத்து: கணவர் தப்பி ஓட்டம்!!