மர்ம நபர்களின் ஆசிட் வீச்சில் காயமின்றி தப்பிய 13 வயது சிறுமிகள்!!

Read Time:1 Minute, 17 Second

6fbbc195-8359-4f43-966f-d7749655f9e9_S_secvpfஉத்தரகாண்ட் மாநில தலைநகரான டேராடூன் அருகேயுள்ள சைலுஸென் டவுன்ஷிப் பகுதியை சேர்ந்த சுமார் 13 வயது மதிக்கத்தக்க இரு சிறுமிகள் தங்களது வீட்டின் அருகேயுள்ள பொதுக் குழாயில் இருந்து நேற்று தண்ணீர் பிடித்துவர சென்றனர்.

அப்போது, ஒரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த முகமூடி அணிந்த இரு மர்ம நபர்கள் அந்த சிறுமிகளின் மீது ஆசிட்டை வீசிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி மறைந்தனர். அவர்கள் வீசிய வீரியம் மிக்க ஆசிட், அந்த சிறுமிகள் பனி தாக்காமல் இருக்க அணிந்திருந்த ‘ஸ்வெட்டர்’ மற்றும் குல்லாவின் மீது பட்டதால் அவர்கள் இருவரும் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள லண்ஸ்டோனே பகுதி போலீசார் தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாதுகாப்பு கேட்டு மதுரை போலீசில் காதல் ஜோடி தஞ்சம்!!
Next post உத்திரப்பிரதேசத்தில் பெண் கற்பழிப்பு: டிரைவர் கைது- கிளீனர் தலைமறைவு!!