கணவனுக்கு பயந்து கள்ளக்காதலனுடன் தூக்கில் தொங்கிய பெண்: 3 குழந்தைகள் தவிப்பு!!

Read Time:3 Minute, 21 Second

37fb677e-9525-4388-ab8d-71bdecd057f0_S_secvpfமேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதியர் சில மாதங்களுக்கு முன்னர் பிழைப்பு தேடி தங்களது 3 குழந்தைகளுடன் அரியானா மாநிலத்தில் உள்ள ஜிண்ட் மாவட்டத்துக்கு வந்தனர்.

மாலிக்பூர் என்ற கிராமத்தில் உள்ள வயல்களில் கூலி வேலை செய்து, அங்கேயே ஒரு வீட்டில் தங்கி அவர்கள் குடும்பத்தை நடத்தி வந்தனர்.

3 குழந்தைகளுக்கு தாயான அந்த 35 வயது குடும்பத்தலைவிக்கு அதே பகுதியை சேர்ந்த திருமணமாகாத சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபருடன் சமீபத்தில் பழக்கம் ஏற்பட்டது. சாதாரண பேச்சுத் தொடர்பாக ஆரம்பித்த இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது.

வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக பழகி வந்துள்ளனர். கணவனையும், குழந்தைகளையும் விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிப்போனால் ‘நாலு பேர் பதினாறு விதமாக பேசுவார்களே..’ என்று யோசித்த அந்தப் பெண், ’இந்த கள்ளத்தொடர்பு தனது கணவனுக்கு தெரியவந்தால் வெட்டிக் கொன்று விடுவாரே..’ என்றும் சிந்தித்தாள்.

புதிதாக அறிமுகமானவனை பிரியவும் மனமில்லாமல், பழையபடி இயல்பான குடும்பத்தலைவியாக வாழவும் முடியாமல் சில நாட்களாக குழப்பத்தில் சிக்கிக்கொண்ட அந்தப் பெண், தனது நிலையை சொல்லி கள்ளக்காதலனிடம் ஆலோசனை கேட்டார்.

இதுவரை காணாத ஒருவித புதிய சுகத்தை அவரிடம் கண்டு ஆனந்தத்தில் திளைத்துவந்த அந்நபர், உன்னைப் பிரிந்து என்னால் வாழ முடியாது என்று தீர்மானமாக தெரிவித்து விட்டான்.

இதனால், சேர்ந்துதான் வாழ முடியவில்லை. சாவிலாவது சேர்ந்தே சாகலாம் என்று முடிவெடுத்த அவர்கள் இருவரும் வயல்காட்டின் மத்தியில் உள்ள அந்தப் பெண்ணின் வீட்டில் நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டு பிணமாக தொங்கினர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஜிண்ட் மாவட்ட போலீசார் பிரேதங்களை கைப்பற்றி மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

ஆசை என்னும் மாயைக்குள் சிக்கி, தங்களை தாயில்லாத அனாதைகளாக தவிக்க விட்டுச்சென்றவளை நினைத்து, கதறியழும் 3 குழந்தைகளை சமாதானப்படுத்த வழியறியாமல் மாலிக்பூர் கிராம மக்களும் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீலகிரியில் குவியும் தேனிலவு தம்பதிகள்!!
Next post 15 வயது சிறுமியை கற்பழித்து கர்ப்பிணியாக்கிய 82 வயது தாத்தா கைது!!