கண்ணமங்கலம் அருகே புதுப்பெண் சாவில் கணவர்–மாமியார் கைது!!
கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு அருகே உள்ள ரேணு கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ். சென்னையில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சத்யா (வயது 20). இவர்களுக்கு 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சத்யாவுக்கு திருமணத்தின் போது பேசியபடி நகை போடுவதில் 2 பவுன் இன்னும் தரவில்லையாம். இது தொடர்பாக கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த சத்யா வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி அவருடைய தாய் ஜோதிலட்சுமி சந்தவாசல் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார்.
புகாரின் பேரில் சந்தவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன், சப்–இன்ஸ்பெக்டர் நந்தினிதேவி ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி 10 மாதங்களே ஆவதால் சத்யாவின் சாவுக்கான காரணம் குறித்து வருவாய் கோட்ட அலுவலர் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் மாமியார் வள்ளியம்மாள், கணவர் ஜெகதீஷ் ஆகியோர் வரதட்சணை கேட்டு வற்புறுத்தியதால் சத்யா தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து சத்யாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் ஜெகதீஷ், மாமியார் வள்ளியம்மாள் ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
Average Rating