திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக ரணில் முறைப்பாடு!!

Read Time:1 Minute, 32 Second

4612560421541269826parli-23-Lதனது கையெழுத்தை போலியாக இட்டு சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தயாரித்துள்ள போலி ஆவணம் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனக்கும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டதாக தெரிவித்து திஸ்ஸ அத்தநாயக்க நேற்று ஆவணம் ஒன்றை வெளியிட்டமை தொடர்பில் ரணில் விக்ரமசிங்க பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்ட ஆவணத்தில் தனது கையொப்பம் போலியாக பயன்படுத்தப்பட்டுள்ளதெனவும் அவ்வாறான ஒப்பந்தம் ஒன்றில் தான் கைச்சாத்திடவில்லை என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதனால் போலி ஆவணம் தயாரித்து போலி கையொப்பம் இட்டமை தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு கோரி எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜேவிபி முக்கியஸ்தர் மீது தெனியாயவில் தாக்குதல்!!
Next post நீலாங்கரையில் காதலனுடன் கடற்கரைக்கு சென்ற கல்லூரி மாணவி கடத்தி கற்பழிப்பு!!