மத மாற்றங்களுக்கு ஏழ்மையும், கல்வி அறிவின்மையுமே காரணம்: பூரி சங்கராச்சாரியார் கருத்து!!
நாட்டில் நடைபெற்றுவரும் மத மாற்ற சம்பவங்களுக்கு ஏழ்மையும், கல்வி அறிவின்மையுமே காரணம் என பூரி சங்கராச்சாரியார் கருத்து தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் மதுரா நகரில் உள்ள விருந்தாவனத்தில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த ‘பூரி சங்கராச்சாரியார்’ சுவாமி நிஸ்சலானந்தா சரஸ்வதி கூறியதாவது:-
இந்துக்கள் வேற்று மதங்களுக்கு மாறுவது தவறான செயலாகும். இப்படி மதம் மாறுபவர்கள் தங்களது மதத்தின் முழு அருமையை அறியாதவர்கள் என்றே கூற வேண்டும்.
இதைப்போன்ற மத மாற்றங்களின் பிண்ணனியில் சலுகைகளால் அவர்கள் ஈர்க்கப்படும் செயல்கள் உள்ளன. ஏழ்மையும், கையாலாகாத்தனமும் கல்வி அறிவின்மையுமே மத மாற்றங்களுக்கு முக்கிய காரணம். நமது சமூக அமைப்பு சரியாக இருந்து, மக்களுக்கான அடிப்படை தேவைகள் அவர்களுக்கு கிடைப்பது உறுதிப்படுத்தப்படுமேயானால், குறைந்தபட்சம் இந்துக்களாவது மதம் மாறாமல் இருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating