ராயப்பேட்டையில் ஆசிரியையிடம் 10 பவுன் நகை கொள்ளை!!

Read Time:2 Minute, 11 Second

c8759e75-09f7-4850-9667-a0442f9f1f4f_S_secvpfராயப்பேட்டை கணபதி தெருவை சேர்ந்தவர் கீதா (65) இந்தி ஆசிரியர். நேற்று மாலை ராயப்பேட்டையில் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டல் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் எதிரே டிப்–டாப் ஆசாமி ஒருவன் வந்தான். அவன் ஆசிரியை கீதாவிடம், வழியில் கலவரம் நடக்கிறது. எனவே நகையை கழற்றி பேக்கில் வைத்து கொள்ளுங்கள் என்றான்.

அதை உண்மை என்று நம்பிய கீதா தனது 2 சங்கிலிகள், 2 வளையல்களை கழற்றி பேக்கில் வைத்தார். அதற்கு அந்த டிப்–டாப் ஆசாமி உதவி செய்தான். வீட்டில் சென்ற பிறகு பேக்கை திறந்து பார்த்தார்.

உள்ளே நகையை காணவில்லை. அவை 10½ பவுன் எடையாகும். அவற்றை அந்த டிப்–டாப் ஆசாமி நைசாக நூதன முறையில் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராயப்பேட்டை போலீசில் கீதா புகார் செய்துள்ளார்.

சூளைமேடு நேரு தெருவை சேர்ந்தவர் ஸ்ரீகலா (40) கேரளாவை சேர்ந்தவர். இவரது கணவர் சவுராஷ்டிரா நகரில் டீக்கடை வைத்துள்ளார். அங்கு சென்று விட்டு அவர் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் ஸ்ரீகலா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். அப்போது கீழே விழுந்த ஸ்ரீகலா சங்கிலியை பிடித்துக்கொண்டு போராடினார். இருந்தும் சிறிதளவு சங்கிலியை பறித்துக்கொண்டு கொள்ளையர்கள் தப்பி விட்டனர். சூளைமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீலாங்கரையில் காதலனுடன் கடற்கரைக்கு சென்ற கல்லூரி மாணவி கடத்தி கற்பழிப்பு!!
Next post சாவிலும் இணைபிரியாத தம்பதி: கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் பரிதாப சாவு!!