பாலச்சந்தரின் இறுதிச் சடங்கை தவறவிட்ட கமல்!!

Read Time:2 Minute, 50 Second

Untitled-131கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘உத்தமவில்லன்’ படத்தின் கிராபிக்ஸ் மற்றும் இசைக்கோர்ப்பு பணிகளுக்காக கமல் அமெரிக்கா சென்றுள்ளார்.

ஏற்கனவே இயக்குனர் கே.பாலச்சந்தர் உடல்நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அவருக்கு தெரிந்ததுமே, உடனடியாக அவர் சென்னை புறப்பட்டு வர தயாரானார்.

ஆனால், அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் இருந்ததால் அவர் அந்த பயணத்தை இரத்து செய்திருந்தார். இந்நிலையில், நேற்று மாலை கே.பாலச்சந்தர் இறந்த செய்தி உடனடியாக கமலுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, உடனடியாக அங்கிருந்து கிளம்பி சென்னைக்கு வர ஆயத்தமானார்.

இதற்கிடையில், கே.பாலச்சந்தரின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். ஆகையால், கமல் அவரின் உடலை நேரில் பார்க்க வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், திடீரென இன்று மாலையே பாலச்சந்தரின் உடல் தகனம் செய்யப்படும் என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளதால், அவரின் இறுதிச்சடங்கில் கமல் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்தது, கே.பாலச்சந்தரின் உறவினர்கள் கூறும்போது, பாலச்சந்தரின் இறுதிச்சடங்கு திடீரென இன்று மாலையே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் கமலஹாசனால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை. இருந்தாலும், பாலச்சந்தரின் குடும்பத்தாருக்கு கமல் நேரில் வந்து ஆறுதல் தெரிவிப்பார் என்று கூறியுள்ளார்.

குழந்தை வேடங்களில் நடித்து வந்த கமலஹாசனை ‘அரங்கேற்றம்’ படத்தின் மூலம் ஹீரோவாக உருவாக்கியவர் கே.பாலச்சந்தர். தொடர்ந்து, தன்னுடைய படங்களில் கமலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரை பிரபல ஹீரோவாக்கியவர் கே.பாலச்சந்தர்.

இருவருக்கும் நீண்ட காலமாக குரு-சிஷ்யன் என்ற உறவு இருந்து வருகிறது. கமல் நடித்துள்ள ‘உத்தமவில்லன்’ படத்தில்கூட கே.பாலச்சந்தர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேச்சேரி அருகே காவிரிஆற்றில் பரிசல் கவிழ்ந்து புதுமாப்பிள்ளை பலி!!
Next post கள்ளக்குறிச்சி: தலையில் கல்லை போட்டு தாயை கொன்ற மனநலம் பாதித்த மகன் கைது!!