மேச்சேரி அருகே காவிரிஆற்றில் பரிசல் கவிழ்ந்து புதுமாப்பிள்ளை பலி!!
சேலம் கொண்டலாம்பட்டி மேட்டு வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (27). விசைத்தறி தொழிலாளி. கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். நண்பர்களான இவர்கள் 2 பேரும் கடந்த 22–ந் தேதி மோட்டார் சைக்கிளில் மேச்சேரிக்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் மேச்சேரி அருகே உள்ள நாகோசிப்பட்டியில் உள்ள மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதிக்கு சென்று குளித்தனர். மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பரிசலை எடுத்து கொண்டு அவர்கள் ஆற்றில் சென்றனர்.
அப்போது நடுஆற்றில் சென்ற போது பரிசல் கவிழ்ந்து விபத்தானது. இதில் அவர்கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கினர். ரமேஷ் நீச்சல் அடித்து உயிர் தப்பினார். மேலும் வீட்டிற்கு சென்று விட்டார். ஆனால் அவர் சீனிவாசன் தண்ணீரில் மூழ்கியது குறித்து எதும் சொல்லவில்லை.
இந்த நிலையில் நேற்று மதியம் தான் இதுகுறித்து மேச்சேரி போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் உமாசங்கர், மற்றும் மேட்டூர் தீயணைப்பு துறையினர் நேற்று மாலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இன்று காலை சீனிவாசனின் உடல் கரை ஒதுங்கியது. இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்த சீனிவாசனுக்கு ராகவி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 6 மாதம் தான் ஆகிறது.
Average Rating