திஸ்ஸவிடம் நஸ்டஈடு கோரும் மைத்திரி!!
போலி கையெழுத்துடனான ஒப்பந்தமொன்றைத் தயாரித்து தனக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட்டார் என குற்றம்சாட்டி, சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் 2,500 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, நீதிமன்றத்தினூடாக கோரிக்கைப் பத்திரமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த பத்திரம் மைத்திரிபால சிறிசேனவின் சட்டத்தரணி எஸ்.கே.கமகேவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த போலி ஒப்பந்தத்தை தயாரித்து வெளியிட்டதன் ஊடாக தனது பெயருக்கு பாரிய கலங்கம் விளைவித்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன கருவதுவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நவம்பர் முதலாம் திகதி ரணில் விக்ரமசிங்கவுடன் மைத்திரிபால எந்தவொரு ஒப்பந்தத்தையும் கையெழுத்திடவில்லை எனவும், மேலும் எந்தவொரு ஒப்பந்தமும் இருவருக்கும் இடையிலும் இல்லை எனவும் அந்த அறிக்கை கூறுகின்றது.
Average Rating