கவுகாத்தி ஐ.ஐ.டி. மாணவர் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை!!
Read Time:56 Second
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வர ராவ். இவர் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஐ.ஐ.டி.யில் பி.டெக். இறுதி ஆண்டு படித்து வந்தார்.
இன்று மதியம் அவர் தங்கியிருந்த விடுதி அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மாணவர் சாவிற்கு உண்மையான காரணம் தெரியவில்லை. இருந்தாலும், தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
Average Rating