உ.பி.யில் இரண்டாவது திருமணம் செய்தவர் சுட்டுக்கொலை!!
Read Time:1 Minute, 8 Second
உத்தர பிரதேசத்தில் உள்ள பதான் பகுதியில் மர்ம மனிதர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 42 வயது நபர் இறந்தார்.
பதான் பகுதியில் உள்ள பாத்தி சௌதரன் என்ற இடத்தில் வசித்து வந்தவர் சத்யாவீர் (வயது 42). இவர் இன்று காலை தனது வீட்டை விட்டு வெளியே வரும்போது அடையாளம் தெரியாத இரண்டு பேர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிவிட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சத்யாவீர் முதல் மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்த விவகாரத்தில் முதல் மனைவியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இவரை சுட்டுக்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating