பண்ருட்டி அருகே 3 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரம்: மாணவன் வெறிச்செயல்!!

Read Time:3 Minute, 12 Second

d6728c62-dd7f-4ef1-8dd7-48bdb3d87d33_S_secvpfபண்ருட்டியை அடுத்த நடுக்காட்டுபாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார், வெளிநாட்டில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சக்தி. இவர்களுக்கு ஹரிணி (வயது 3) என்ற மகளும், கெவின் என்ற 1 வயது கைக்குழந்தையும் உள்ளனர்.

நேற்று மாலையில் ஹரிணி விளையாடுவதற்காக பக்கத்து வீட்டு சிறுமியை எதிர்பார்த்து நின்றுக்கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் ஹரிணி மாயமாகி விட்டாள்.

தனது மகளை காணாமல் திடுக்கிட்ட சக்தி, அக்கம் பக்கத்து வீடுகளில் தேடினார். அங்கு காணாததால், அருகில் உள்ள முந்திரி காட்டுக்குள் தேடி சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த தினேஷ் (15) என்ற 10–ம் வகுப்பு மாணவன் எதிரே வந்தான். அவன், அந்த பெண்ணை கண்டவுடன் ஓட்டம் பிடித்தான்.

இதனால் சக்தி சந்தேகம் அடைந்தவாறே ஹரிணியை தேடினார். சற்று தூரத்தில் ஹரிணி மயங்கி கிடந்தாள். அவளுடைய கால் தொடை பகுதியில் சிராய்ப்பு காயம் தென்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த சக்தி, கண்ணீர் விட்டு கதறியபடி தனது மகளை தூக்கி வீட்டுக்கு கொண்டு வந்தார். அந்த சிறுமியின் முகத்தில் தண்ணீரை தெளித்து மயக்கத்தில் இருந்து விடுவித்தார். பிறகு அந்த சிறுமியிடம் நடந்தது பற்றி விசாரித்தார்.

அதற்கு பதிலளித்த ஹரிணி, மிட்டாய் வாங்கி தருவதாக பக்கத்து வீட்டு அண்ணன் தினேஷ் தன்னை முந்திரி காட்டுக்குள் கூட்டி சென்றார். பிறகு தன்னிடம் அவர் தகாதபடி நடந்து கொண்டார் என நடந்த விபரீதத்தை கூறினார்.

பிறகு அப்பகுதியில் ஹரிணிக்கு முதலுதவி அளித்து பண்ருட்டியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதன் பின்னர் ஹரிணி மருத்துவ பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டாள்.

ஹரிணியை ஏமாற்றி அழைத்து சென்று தினேஷ் பாலியல் பலாத்காரம் செய்ததாக பண்ருட்டி மகளிர் போலீசில் சக்தி புகார் செய்தார். அதன்பேரில் தலைமறைவாகிவிட்ட மாணவன் தினேசை போலீசார் தேடினர். தீவிர தேடுதலில் மறைவான இடத்தில் பதுங்கியிருந்த தினேஷ் சிக்கினான். அவனிடம் நடந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ரத்தக்காயங்களுடன் வந்த இளம்பெண்!!
Next post கோவை அருகே தந்தை, மகளை குத்திக் கொன்ற கொலையாளிகள் சிக்கினர்!!