ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ரத்தக்காயங்களுடன் வந்த இளம்பெண்!!

Read Time:3 Minute, 30 Second

4db37a1e-8002-44ee-9bc7-2d3d2c90b4b9_S_secvpfநாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி வசந்தி (வயது 30).

இவர்கள் ஈரோடு அருகே உள்ள லட்சுமி நகரில் தண்ணீரை சுத்தப்படுத்தும் எந்திரத்தை பழுது பார்க்கும் கடை வைத்து உள்ளார்கள்.

சம்பவத்தன்று கடையின் கீழ் உள்ள தொட்டியில் தண்ணீர் எடுப்பதற்காக வசந்தி சென்றார். அப்போது அங்குள்ள சிலர் ஏன் இங்கு தண்ணீர் எடுக்கிறீர்கள் என்று கேட்டனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இது பற்றி வசந்தி தனது கணவர் ஜெகநாதனிடம் கூறினார். எனவே அவர் இது பற்றி கேட்பதற்காக தனது மனைவியுடன் சென்றார்.

அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதை பார்த்த சிலர் அங்கு வந்து அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் இன்று காலை தண்ணீரை சுத்தப்படுத்தும் எந்திரத்தை சர்வீஸ் செய்ய வேண்டும் என்று ஒருவர் ஜெகநாதனின் செல்போனுக்கு பேசினார்.

இதனால் ஜெகாநாதன் தனது மனைவி வசந்தியுடன் வந்தார். அப்போது கடை முன்பு இருந்த சிலர் ஒன்று சேர்ந்து வசந்தியை அடித்து உதைத்ததாகவும், அரிவாளால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது. இதை தடுக்க முயன்ற ஜெகதாதனும் தாக்கப்பட்டார்.

முன்னதாக வசந்தி தனது கணவருடன் சித்தோடு போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு இருந்த போலீசாரிடம் எங்களது கடை முன்பு சுமார் 20 பேர் கூடி நிற்பதாகவும் இதனால் எங்களுக்கு சந்தேகம் உள்ளதாகவும் கூறினர்.

இதற்கு போலீசார் அவர்கள் உங்களை எதுவும் செய்ய மாட்டார்கள். நீங்கள் கடைக்கு போங்கள் என்று கூறியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் கடைக்கு வந்த வசந்தி தாக்கப்பட்டு உள்ளார்.

அரிவாள் வெட்டினால் வசந்திக்கு கண் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் வசந்தி ரத்தக்காயங்களுடன் தனது கணவர் ஜெகநாதனுடன் ஆட்டோவில் ஏறி நேராக ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார்.

இந்த நேரத்தில் அங்கு வந்த போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி ரத்தக்காயங்களுடன் ஒருபெண் ஆட்டோவில் இருந்து இறங்குவதை பார்த்தார்.

உடனே அவர் ஒரு பெண் போலீஸ்காரரை அனுப்பி ரத்தக்காயம் அடைந்த வசந்தியை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்குமாறு உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட வசந்திக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

ஒரு பெண் ரத்தக்காயங்களுடன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வறுமையில் வாடும் செல்போன் நிறுவனங்கள்: இண்டெர்நெட் வாய்ஸ் காலுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு!!
Next post பண்ருட்டி அருகே 3 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரம்: மாணவன் வெறிச்செயல்!!