வாரணாசியில் வீடு புகுந்து இளம்பெண்ணை உயிரோடு எரித்துக் கொன்ற வாலிபர்கள்!!

Read Time:1 Minute, 27 Second

997b1b55-170b-4b88-ab55-65bb987dd975_S_secvpfவாரணாசியின் லல்லாபுரா பகுதியில் வசித்து வரும் 19 வயது பெண்ணை மூன்று வாலிபர்கள் வீடு புகுந்து மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செயதனர்.

12ஆம் வகுப்பு படித்து வந்த அந்தப் பெண் பள்ளிக்குப் போகும்போது மூன்று வாலிபர்கள் வழிமறித்து பாலியல் தொந்தரவு செய்தனர். இதனை அந்தப் பெண் கண்டித்து எச்சரித்துள்ளார். இச்சம்பவம் நடைபெற்ற சில நாட்களுக்குப் பிறகு, கடந்த 18-ம் தேதி அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த மூன்று பேரும் அவரது தாயாரின் கண்ணெதிரிலேயே அந்தப் பெண்ணின் உடல் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளனர்.

உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அந்தப் பெண் கடும் தீக்காயங்களின் காரணமாக இன்று அதிகாலை இறந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், இந்த கொடூர சம்பவத்திற்குக் காரணமான மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பணியில் இருக்கும்போது பார் பணிப்பெண்ணுடன் நடனமாடிய சப்-இன்ஸ்பெக்டர்!!
Next post கபிஸ்தலம் அருகே லாரி டிரைவருக்கு அரிவாள் வெட்டு: மாமனார்–மைத்துனர் கைது!!