இன்றேனும் இறுதி முடிவு எட்டப்படுமா?
Read Time:1 Minute, 1 Second
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும் என ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இன்று அக் கட்சியின் உயர் மட்டக்குழு சந்திப்பொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக முஸ்லிம் காங்கிரசின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இதற்கு முன்னரும் குறித்த விடயம் தொடர்பில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே பல சந்திப்புக்கள் இடம்பெற்ற போதும் இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating