யாழில் அநாதரவாகக் கிடந்த கஞ்சாப் பொதி!!
Read Time:1 Minute, 5 Second
பருத்தித்துறை கடற்கரையில் அநாதரவாகக் கிடந்த 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான 25 கிலோ கேரளா கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை – இன்பருட்டிப் பகுதி கடற்கரையில் இன்று சனிக்கிழமை காலை அநாதரவான நிலையில் சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்று காணப்பட்டுள்ளது.
அப் பொதி தொடர்பில் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் அதனை பிரித்துப் பார்த்த போது, கஞ்சா இருந்துள்ளது.
இதனையடுத்து, அப் பொதியினை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பொதி கடலிலே மிதந்து வந்து கரை ஒதுங்கி இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
Average Rating