கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணிடம் சித்ரவதை: கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு!!
Read Time:1 Minute, 16 Second
மதுரை தத்தனேரி அருகே உள்ள கீழவைத்தியநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் அய்யனன். இவரது மகள் ரேவதி (வயது26). இவருக்கும் தூத்துக்குடியை சேர்ந்த என்ஜினீயர் அருண் பிரகாசுக்கும் கடந்த 2012–ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் அருண்பிரசாத் வேலைபார்த்து வந்தார். திருமணத்தின்போது 40 பவுன் நகையும், ரூ.1 லட்சம் மதிப்பிலான சீர்வரிசைகளும் வழங்கப்பட்டதாம்.
இந்த நிலையில் கூடுதல் வரதட்சணையாக 60 பவுன் நகையும், ரூ.5 லட்சமும் கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்ரவதை செய்ததாக தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் ரேவதி புகார் கொடுத்துள்ளார்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் கவுசல்யா தேவி விசாரணை நடத்தி அருண் பிரசாத், அவரது தந்தை பாஸ்கரன், தாய் பொன்லட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
Average Rating