கள்ளக்குறிச்சி அருகே இளம்பெண்ணை கற்பழித்த 2 வாலிபர்கள் கைது!!

Read Time:1 Minute, 43 Second

d097d904-19f1-4bd7-a05a-466c2f10ea9c_S_secvpfகள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன், விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகள் ரேகா (வயது 17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
நேற்று மாலை ரேகா அங்குள்ள வயல்வெளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மாரியாப்பிள்ளை (24), கவியரசன் (22) மற்றும் பாக்கியராஜ் (23) ஆகிய 3 பேரும் சேர்ந்து ரேகாவை குண்டுக்கட்டாக மறைவான இடத்துக்கு தூக்கி சென்றனர். அங்கு ரேகாவின் வாயில் துணியை திணித்து மாறி, மாறி கற்பழித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதனால் சோர்வடைந்த நிலையில் வீட்டுக்கு வந்த ரேகாவை அவரது பெற்றோர் விசாரித்தனர். அப்போது தன்னை 3 பேர் கற்பழித்த விவரத்தை ரேகா கூறி அழுதார்.

இதையடுத்து முருகன் இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாரியாப்பிள்ளை மற்றும் கவியரசன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவான பாக்கியராஜை தேடி வருகிறார்கள்.

கைது செய்யப்பட்ட மாரியாப்பிள்ளைக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நயன்தாராவை ஆன்டி என்றழைத்து வாங்கிகட்டிக் கொண்ட நடிகர்!!
Next post பெண்களிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட ஊராட்சி தலைவருக்கு சரமாரி அடி–உதை!!