கள்ளக்குறிச்சி அருகே விதவை பெண்ணை கொன்றவர்கள் யார்?: போலீசார் விசாரணை!!

Read Time:2 Minute, 59 Second

94651484-775a-4942-a692-1c7e2370351e_S_secvpfகள்ளக்குறிச்சி அருகே பெத்தானூர்–சிறுவத்தூர் செல்லும் ரோட்டில் நேற்று முன்தினம் ஒரு பெண் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரை யாரோ அடித்து கொன்று பிணத்தை வீசி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சின்னசேலம் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து கொலை செய்யப்பட்டு கிடந்தபெண் யார்? எந்த ஊர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் யார்? என்பது தெரிய வந்தது. அந்த பெண் கள்ளக்குறிச்சி அருகே பொற்படாகுறிச்சி கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்பவரது மகள் யசோதை (வயது 35) என்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் யசோதைக்கு கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு நெய்வேலியை சேர்ந்த மூக்கன் என்பவருக்கும் திருமணம் நடந்ததும், இவர்களுக்கு கார்த்திக் (16), கலையரசன் (14) ஆகிய 2 மகன் உள்ளதும் தெரியவந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மூக்கன் இறந்துவிடவே யசோதை தனது மகன்களுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக யசோதை தச்சூரில் உள்ள ஒரு தனியார் விதை பண்ணையில் வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று வேலைக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற யசோதை அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இந்த நிலையில்தான் பெத்தானூர்–சிறுவத்தூர் சாலையில் யசோதை கொலை செய்யப்பட்டு கிடந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் யசோதையை கொன்றவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். யசோதை உடல் அருகே கிடந்த அவரது செல்போனை கைப்பற்றி அந்த செல்போனில் யசோதையிடம் யார்–யார் பேசி உள்ளனர்? என்பதை கண்டறிந்து அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ள

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆலங்குளம் அருகே 3 வயது சிறுவன் கடத்தல்?: போலீசார் தீவிர விசாரணை!!
Next post சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்: தந்தையின் நண்பர் கைது!!