வாக்காளர் அட்டை விநியோகிக்கும் காலம் நீடிப்பு!!
Read Time:1 Minute, 7 Second
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பிற்கான, வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் காலம் எதிர்வரும் மூன்றாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தேர்தல்கள் ஆணையாளரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரதாஸ குறிப்பிட்டுள்ளார்.
வாக்காளர் அட்டை விநியோகம் கடந்த 22ம் திகதி ஆரம்பிக்கப்பட்டதோடு, எதிர்வரும் 31ம் திகதி நிறைவடையவிருந்தது.
இந்தநிலையில் சில மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இதுவரை 55% – 60% வீதமான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Average Rating