சுமார் ஒரு மில்லியன் பேர் பாதிப்பு, 23 பேர் பலி!!
Read Time:1 Minute, 9 Second
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும் எட்டுப் பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக 281,006 குடும்பங்களைச் சேர்ந்த 1,016,395 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் இங்கு மேலும் கூறினார்.
4,571 வீடுகள் முழுமையாகவும், 14,511 வீடுகள் பகுதியளவிலும் சேதடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் மஹிந்த அமரவீர எதிர்வரும் காலங்களில் இந்தத் தொகை அதிகரிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating