த.தே.கூ கலந்துரையாடல் – இன்னும் தீர்மானம் இல்லை!!
Read Time:1 Minute, 0 Second
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் வினவியபோது, கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், எனினும் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கப் போவதாக இன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating