சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களின் வேலை நாளை தொடக்கம்!!
Read Time:59 Second
இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாளை தமது பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணையாளரின் பணிப்புக்கு அமைய ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலயத்தின் பிரதிநிதிகள் 36 பேர் இலங்கை வந்துள்ளனர்.
இன்று அவர்களுக்கு ஒருநாள் செயலமர்வும் நடத்தப்படவுள்ளது.
இதேவேளை, தேர்தல் ஆணையாளரின் பிரதிநிதிகளுக்கு ஏற்படும் அழுத்தம் மற்றும் கொலன்னாவ பிரதேசத்திற்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பு ஆகிய விடயங்கள் குறித்து பெப்ரல் அமைப்பு பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோனுக்கு கடிதம் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating