திருட்டு வழக்கில் கைதான வாலிபர் ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்தப்பட்டாரா?: உயர் அதிகாரிகள் விசாரணை!!

Read Time:3 Minute, 9 Second

feddddbe-4f83-4302-a52f-25ccc87d2651_S_secvpfமாம்பலம் பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடிய குற்றத்துக்காக சதீஷ்குமார் (19) என்ற வாலிபரை மாம்பலம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

அவருடன் கூட்டாளிகள் 3 பேரும் பிடிபட்டனர். இவர்கள் அனைவரும் 18 வயது நிரம்பாத இளம் குற்றவாளிகள். போலீஸ் விசாரணை முடிந்து சதீஷ் குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 19 வயதில் இருந்து 21 வயது வரையிலான குற்றவாளிகள் புழல் சிறையில் தனியாக அடைக்கப்பட்டிருப்பார்கள்.

இளம் குற்றவாளிகளான மற்ற 3 பேரும் கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சதீஷ்குமார் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக அவரது தாய் கூறும் போது, ‘‘சதீஷ்குமாரை, போலீஸ் காவலில் வைத்து, சக குற்றவாளிகளால் ஓரின சேர்க்கைக்கு உட்படுத்தியுள்ளனர். இதனாலேயே அவனது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது’’ என்றார். அதே நேரத்தில் போலீசார் மீதும் அவர் சரமாரியான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.

சதீஷ்குமாரை கைது செய்து 2 நாட்கள் வரை போலீசார் தங்களது காவலில் வைத்திருந்தனர் என்றும் அவரது தாய் கூறியிருந்தார். இந்த குற்றசாட்டுகளை போலீசார் மறுத்தனர். இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

கடந்த 11–ந்தேதி அன்று சதீஷ்குமாரை கைது செய்து புழல் சிறையில் அடைத்து விட்டோம். கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஆஸ்பத்திரி பரிசோதனைகள் எல்லாம் முடிந்துதான் சிறைக்கு அனுப்பி வைத்தோம். 2 வாரங்கள் கழித்து தற்போது சதீஷ்குமார், ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போலீஸ் காவலில் அதுபோன்று எந்த விதமான சம்பவங்களும் நடக்கவில்லை. சிறையில் ஏதாவது நடந்ததா? என்பது பற்றி போலீசுக்கு தெரியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

போலீஸ் காவலில் வாலிபர் ஒருவர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புத்தாண்டு இரவில் பெண்களுடன் வந்து வரம்பு மீறும் வாலிபர்கள் மீது வழக்கு: போலீசார் தீவிர கண்காணிப்பு!!
Next post கே.பி பணிகளைத் தொடருவேன்!!