மத்திய பிரதேசத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கற்பழித்த கும்பல்!!
Read Time:1 Minute, 18 Second
மத்திய பிரதேசத்தில் உள்ள சரன்பூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட காச்சிகேதி இடத்தில் 3 பேர் கொண்ட ஒரு கும்பல் தனியாக வீட்டில் இருந்த திருமணமான பெண்ணை கற்பழித்துள்ளனர். நேற்று இரவுஇந்த சம்பவம் நடந்துள்ளது.
காச்சிகேதியைச் சேர்ந்த அந்த பெண் தனது வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த மூன்று நபர்கள், அந்த வீட்டிற்குள் நுழைந்து அந்த பெண்ணை கற்பழித்ததுடன், இதுபற்றி வெளியில் கூறினாலோ, சத்தம் போட்டாலோ கொன்று விடுவதாக மிரட்டி விட்டு சென்றுள்ளனர்.
ஆனால், அந்த பெண் தனக்கு நடந்த கொடுமையை போலீசாரிடம் கூறியதுடன் புகாரும் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் நஜ்ஜூ, அஜிம் மற்றும் ஒரு நபர் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Average Rating