ரெயில்வே தண்டவாளம் ஓரம் விஷம் குடித்து இளம் தம்பதியர் தற்கொலை!!
Read Time:1 Minute, 14 Second
மத்தியப்பிரதேசம் மாநிலம், போபால் அருகேயுள்ள நாரியல்கேடா பகுதியின் தண்டவாளத்தின் ஓரம் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் பிரேதங்கள் கிடப்பதாக அப்பகுதியில் வசிக்கும் சிலர் சோலா மந்திர் போலீசுக்கு இன்று தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பிரேதங்களை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே விஷம் குடித்திருந்த அவர்கள், கைகளின் மணிக்கட்டு நரம்புகளையும் வெட்டிக்கொண்டு இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இறந்துக் கிடந்தது யார்? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, குடும்ப வறுமை காரணமாக கூலித் தொழிலாளியான கிருஷ்ணா சிங் சவுகான் (28), அவரது மனைவி ஜெய் சவுகான் ஆகியோர் (26) இந்த விபரீத முடிவை தேர்ந்தெடுத்ததாக தெரிய வந்துள்ளது.
Average Rating