கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவியை தாக்கிய பேராசிரியர்–கல்லூரி மாணவி கைது!!
காட்பாடி அடுத்த காளாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார்(28). சென்னை அருகே உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். இவரது மனைவி ரூபா(எ)பிங்கி. திருமணமாகி 4 வயதில் மகன் உள்ளான்.
கடந்த 2 வருடத்திற்கு முன் வினோத்குமார், ஆற்காட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். அப்போது பூட்டுத்தாக்கு பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் படித்துள்ளார். அப்போது மாணவிக்கும், வினோத்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த ரூபா தட்டிக்கேட்டார். இதனால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதற்கிடையில் தற்போது அந்த மாணவி குடியாத்தம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் மேற்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வினோத்குமாருக்கு பிறந்த நாள் என்பதால் காட்பாடியில் உள்ள ஓடைப்பிள்ளையார் கோவிலுக்கு மனைவி ரூபாவுடன் வந்தார். அப்போது அந்த கல்லூரி மாணவியும் கோவிலுக்கு வந்தார். அங்கு ரூபாவுக்கும், மாணவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது வினோத்குமாரும் மாணவியுடன் சேர்ந்து மனைவி ரூபாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதுகுறித்து ரூபா காட்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி. மதிவாணன் உத்தரவின்பேரில், சப்–இன்ஸ்பெக்டர் ஜனார்த்தினி வழக்குப்பதிவு செய்து வினோத்குமார், மாணவி ஆகியோரை கைது செய்தார்.
Average Rating