திருப்புவனம் அருகே கணவர் திட்டியதால் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை!!
Read Time:1 Minute, 11 Second
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா டி.பாப்பாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். பாத்திரக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி முனீஸ்வரி (வயது19). இருவருக்கும் திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது.
சம்பவத்தன்று ஏற்பட்ட குடும்ப தகராறில் முருகன் மனைவியை திட்டினாராம். இதனால் மனம் உடைந்த முனீஸ்வரி உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனீஸ்வரி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தாயார் இந்திரா கொடுத்த புகாரின் பேரில் திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணமாகி ஒரு வருடம் ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Average Rating