திருமணமான 45 நாளில் நர்சிங் மாணவி காதலனுடன் ஓட்டம்!!

Read Time:3 Minute, 5 Second

b775a546-7c9c-4f5f-aae0-cdc3b9a9e220_S_secvpfதியாகதுருகம் அருகே பேராள் கிராமத்தை சேர்ந்தவர் அல்லிமுத்து. இவரது மகள் விஜயசாந்தி (வயது 21). இவர் தியாக துருகத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2–ம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார். இவருக்கும் இவரது தாய் மாமன் ராஜீவ் காந்தி (25) என்பவருக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கணவன் வீட்டில் இருந்து கொண்டே விஜயசாந்தி கல்லூரிக்கு சென்று வந்தார். கல்லூரிக்கு பஸ்சில் சென்று வரும்போது ஏற்கனவே அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் சரவணன் (22) என்பவருடன் விஜயசாந்திக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று கல்லூரிக்கு சென்று வருவதாக கூறி சென்ற விஜயசாந்தி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் விஜயசாந்தி இல்லை.

பின்னர் விசாரித்ததில் விஜயசாந்தியை காதலன் சரவணன் அழைத்து சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அல்லிமுத்து இதுகுறித்து தியாகதுருகம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயசாந்தியையும், அவரை அழைத்து சென்ற சரவணனையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் போலீசார் தேடுவதை அறிந்த சரவணன் தனது காதலி விஜயசாந்தியுடன் நேற்று மாலை போலீஸ் நிலையத்துக்கு ஆஜராக வந்தார். அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்த அல்லிமுத்து மகளை பார்த்ததும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். உடனே அல்லி முத்துவின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். இதற்கெல்லாம் காரணம் சரவணன் தான் என்று கூறி அவரை அடிக்க பாய்ந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். மேலும் மயங்கி விழுந்த அல்லிமுத்துவை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் விஜயசாந்தி மற்றும் சரவணனிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விஜயசாந்தி தனது கணவனுடன் சேர்ந்து வாழ ஒத்துக்கொண்டார். இதையடுத்து போலீசார் விஜயசாந்தியை அவரது கணவன் ராஜீவ்காந்தியுடன் அனுப்பி வைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கே.பி பணிகளைத் தொடருவேன்!!
Next post புலி படத்தில் விஜய் நடிப்பாரா?