மாம்பலம் போலீஸ் நிலையத்தில் ஓரினச்சேர்க்கையை ரசித்த 2 போலீசார் சிக்குகிறார்கள்!!

Read Time:3 Minute, 29 Second

324ee230-9415-46be-b165-6fa8ba27bb68_S_secvpfமாம்பலம் போலீஸ் நிலையத்தில் செல்போன் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் சதீஷ்குமார் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தப்பட்ட விவகாரம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் நிலைய லாக் அப்பில் வைத்து, சக கைதிகளான இளம் குற்றவாளிகளை வைத்தே சதீஷ்குமாரிடம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட சொல்லி 2 போலீஸ்காரர்கள் அதனை ரசித்து பார்த்ததாகவும் புகார் கூறப்பட்டிருக்கிறது.

இச்சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று மாம்பலம் போலீஸ் நிலையத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சதீஷ்குமார் மீது போடப்பட்டுள்ள வழக்கு விவரங்கள் குறித்தும், அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறை கூடத்தையும் போலீசார் பார்வையிட்டனர்.

குற்றப்பிரிவில் பணியாற்றி வரும் போலீசாரின் போட்டோக்களையும் சி.பி. சி.ஐ.டி. போலீசார் சேகரித்தனர். சதீஷ்குமாருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சதீஷ்குமாரின் தாய் சகுந்தலாவிடம் எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் வைத்து இன்று காலை விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது தனது மகனுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து சகுந்தலா சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் விளக்கி கூறினார். பாதிக்கப்பட்ட வாலிபர் சதீஷ்குமாரும் சி.பி.சி. ஐ.டி. போலீசாரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறார். அவரிடம் மாம்பலம் குற்றப்பிரிவு போலீசாரின் போட் டோக்களை காட்டி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் சதீஷ்குமாரை ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வைத்து ரசித்த 2 போலீஸ் காரர்களையும் அடையாளம் காண முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் போலீசாரை வரிசையாக நிறுத்தி அடையாள அணிவகுப்பு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் முடிவில் ஓரின சேர்க்கையை ரசித்ததாக புகார் கூறப்பட்டிருக்கும் 2 போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

முதலில் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய பின்னர் 2 போலீஸ்காரர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வட,கிழக்கு ஒன்றிணைந்த ஆட்சி பற்றி பேச வேண்டிய அவசியம் எமக்கில்லை!
Next post வேலூரில் ரூ.1050 கோடி மது விற்பனை: 2013–ஐ விட ரூ.250 கோடி அதிகம்!