பதுளை – எல்ல தபால் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய செந்தில் தொண்டமான் கைது செய்யப்படுவார்!!
ஊவா மாகாண சபை அமைச்சர் செந்தில் தொண்டமானால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் தபால் ஊழியர் ஒருவர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பதுளை – எல்ல தபால் நிலையத்தில் பணிபுரியும் பெரியசாமி ஞானசேகரன் என்ற தபால் ஊழியரே தாக்கப்பட்டு வைதத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஞானசேகரன் அத தெரண தமிழிணையத்திடம் தெரிவித்ததாவது,
எல்ல நியூபோர்ட் தோட்டத்தில் வாக்களார் அட்டை, தபால்களை விநியோகித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது கூட்டம் ஒன்றை நிறைவு செய்துவிட்டு வந்த அமைச்சர் செந்தில் தொண்டமான் என்னை அவருக்கு அருகில் அழைத்தார். நீ ஐயாவா என்று கேட்டார்.. நான் இல்லை சேர் என்றேன்.. திடீரென என்னை அவர் சரமாரியாகத் தாக்கினார். எதற்கு தாக்கினார் என்றே தெரியவில்லை. தாக்குதலில் எனது கையில் இருந்த வாக்காளர் அட்டை, தபால்கள், மற்றும் என்னுடைய பணம், நகை காணாமல் போயுள்ளது. எனக்கும் அவருக்கும் முன்விரோதம் இல்லை. கடந்த தேர்தலில் கூட வெற்றிலைக்குத் தான் வேலை செய்தேன். தாக்குதல் குறித்து எல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன்.´ என்று தெரிவித்தார்.
சம்பவம் குறித்து அமைச்சர் செந்தில் தொண்டமானிடம் கருத்து கேட்க அத தெரண தமிழிணையம் அவருடைய கையடக்கத் தொலைபேசிக்கு அழைத்த போதும் அதற்கு பதில் எதுவும் கிடைக்கவில்லை.
இது குறித்து எல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் அத தெரண செய்தி்ப் பிரிவு வினவியபோது, முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் சாட்சிகள் விசாரணை செய்யப்பட்ட பின் சம்பந்தப்பட்ட அமைச்சர் கைது செய்யப்படுவார் என்றும் தெரிவித்தார்.
Average Rating