3 குழந்தைகளை தவிக்கவிட்டு கள்ளகாதலியுடன் ஓடிய கணவர்: மனைவி கண்ணீர்!!
திருவள்ளூர் அடுத்த வெள்ளியூரை சேர்ந்தவர் ராமமூர்த்தி (33) லாரி டிரைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த புனிதா என்பவருக்கும் கடந்த 2005–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு விஷாலி, மோனிஷா, நிஷா என மூன்று பெண் குழந்தைகள் உள்ளன. ஆண் குழந்தை பெற்று தரவில்லை என்று கூறி ராமமூர்த்தி, புனிதாவை அடித்து துன்புறுத்தி உள்ளார். இதனால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் ராமமூர்த்திக்கு திருவள்ளூர் முடினூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இடையே கள்ளகாதல் ஏற்பட்டது. இது குறித்து புனிதா வெங்கல் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுரேந்தர் விசாரணை நடத்தி ராமமூர்த்தியை புனிதாவுடன் சேர்ந்து வாழுமாறு கூறி அனுப்பி வைத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ராமமூர்த்தி கடந்த 24–ந்தேதி கள்ளகாதலியுடன் ஊரை விட்டு ஓட்டம் பிடித்தார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து புனிதா தனது கணவரை எப்படியாவது தன்னிடம் மீட்டு தருமாறு திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு சாம்சனிடம் புகார் மனு கொடுத்தார். இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுக்குமாறு வெங்கல் இன்ஸ்பெக்டருக்கு எஸ்.பி. சாம்சன் உத்தரவிட்டார். ஆண் குழந்தைக்காக மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகளை தவிக்க விட்டு கணவர் ஓடிய சம்பவத்தால் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating