செங்கோட்டையில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி: வாலிபர் கைது!!
Read Time:1 Minute, 27 Second
செங்கோட்டை மேலூர் கலைஞர் தெருவை சேர்ந்தவர் சாந்தி. இவரது 5 வயது மகள் தர்ஷினி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன).
சம்பவத்தன்று தர்ஷினி அப்பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த காந்திப்பாண்டியன் மகன் கூலித் தொழிலாளியான சுரேஷ்குமார் (25) என்பவர் சிறுமியை கோவிலுக்கு பின்புறம் கொண்டு சென்று பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
அந்த சமயத்தில் அங்கு வந்த பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து சுரேஷ்குமாரை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் சிறுமியை விட்டு விட்டு முட்புதருக்குள் ஓடி தப்பி விட்டார்.
இதுகுறித்து சாந்தி செங்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற சுரேஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating