ஓட்டப்பிடாரம் அருகே பள்ளி மாணவியை கொன்று வாலிபர் தற்கொலை!!

Read Time:4 Minute, 52 Second

55c4dfc9-8cbd-4a16-b01e-46c3b2c6e3d2_S_secvpfதூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அடுத்த பசுவந்தணை அடுத்துள்ள தெற்குதீர்த்தாம்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சுரேஷ்குமார், இவர் தொலை தூர கல்வி மூலம் பி.ஏ. படித்து வந்தார். இவரது எதிர்வீட்டில் வசித்து வருபவர் உறவினர் ராமர், இவரது மகள் கங்காதேவி (வயது 16), இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார்.

சுரேஷ்குமாரும், கங்காதேவியும் காதலித்து வந்தனர். கங்காதேவி அடிக்கடி சுரேஷ்குமாரின் வீட்டிற்கு சென்று அவருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் புத்தாண்டு தினத்தன்று ராமர் மற்றும் கங்காதேவியின் பெற்றோர் வெளியூர் சென்று விட்டனர். பின்னர் மறுநாள் அவர்கள் வீடு திரும்பிய போது கங்காதேவி சுரேஷ்குமார் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

அதே போல சுரேஷ்குமார், கங்காதேவி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதனை கண்ட இருவீட்டாரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை, மற்றும் பசுவந்தணை போலீசார் விரைந்து வந்து இருவரது உடல்களையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் கொலை செய்யப்பட்டார்களா? அல்லது தற்கொலை செய்திருந்தால் அதற்கான காரணம் என்ன? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் பள்ளி மாணவியான கங்காதேவியை சுரேஷ்குமார் கொன்று விட்டு அவர் தற்கொலை செய்துகொண்டது அம்பலமானது. இதன் விபரம் வருமாறு:–

சுரேஷ்குமாரும், கங்காதேவியும் தீவிரமாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். சுரேஷ்குமார் தனது காதலியிடம் உன்னைத்தவிர வேறு யாரையும் திருமணம் செய்யமாட்டேன் என அடிக்கடி கூறியுள்ளார். இவர்களின் காதலுக்கு இருவீட்டிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

குறிப்பாக கங்காதேவியின் பெற்றோர் மகளிடம் நீ படித்துகொண்டிருக்கிறாய், உனக்கு இப்போது காதல் வேண்டாம் என கண்டித்துள்ளனர். இதனை கங்காதேவி தனது காதலனிடம் கூறியுள்ளார். அப்போது சுரேஷ்குமார் நாம் இங்கிருந்தால் நம்மை பிரித்து விடுவார்கள். எனவே சீக்கிரம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என கூறியுள்ளார்.

சம்பவத்தன்று இருவரின் பெற்றோரும் வெளியூர் சென்றுள்ளனர். அப்போது கங்காதேவி காதலன் வீட்டிற்கு சென்று அவருடன் நீண்ட நேரம் பேசியுள்ளார். சுரேஷ்குமார் கங்காதேவியுடன் நாம் இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ளலாம் என கூறியுள்ளார்.

இதற்கு கங்காதேவி மறுத்து நான் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் இருவரும் திருமணம் செய்து கொள்வோம். இப்போது திருமணம் வேண்டாம் என கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சுரேஷ்குமார் காதலியை தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளார்.

பின்னர் அவர் காதலியை கொன்றதால் போலீசாருக்கு பயந்து எதிரே உள்ள கங்காதேவியின் வீட்டிற்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சூர்யாவின் தலைப்பைச் சுட்ட விஜய்!!
Next post இயக்குநர் சங்கருக்கு இளையராஜா நோட்டீஸ்!!