நுங்கம்பாக்கத்தில் சீனப்பெண்ணிடம் வழிப்பறி!!
சென்னை நுங்கம்பாக்கம் ராஜாஜி தெருவில் வசித்து வருபவர் லட்சுமி நரசிம்மன். இவரது மனைவி லியான் தயான் (வயது30). சீனப்பெண்ணான இவர் நேற்று இரவு 8 மணியளவில் வீட்டிற்கு நடந்து சென்றார்.
லயோலா கல்லூரி அருகில் சென்று கொண்டிருந்த போது மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் அவரது கைப்பையை பறித்து கொண்டு தப்பி ஓடினார்.
அவர் கூச்சல் போட்டார். கண் இமைக்கும் நேரத்தில் மர்ம ஆசாமி தலைமறைவானான். அவரது கைப்பையில் வங்கி பாஸ் புத்தகம், பாஸ்போர்ட், அடையாள அட்டை, ஹாங்காங் நாட்டின் கரன்சி ஆகியவை இருந்தன.
இதுபற்றி லியான் நுங்கம் பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் தொடரும் வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் வெளியே செல்லவே தயங்குகின்றனர்.
சீனப் பெண்ணின் பையில் நிறைய பணம் இருக்கும் என்று நினைத்து வாலிபர் பறித்து சென்றார். ஆனால் அதில் அவர் எதிர்பார்த்த எதுவும் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்திருப்பார்.
போலீசார் வழிப்பறி திருடர்களை பலரை தொடர்ந்து கைது செய்து வந்தாலும் கூட அடுத்தடுத்து நகை பறிப்பு சம்பவம் நடந்து வருகிறது.
Average Rating