ரெயில் நிலையம் அருகே கண்கள் தோண்டப்பட்ட நிலையில் கிடந்த மனிதர்!!

Read Time:1 Minute, 49 Second

52d3fc05-ebad-4d59-b594-861cd9e150f8_S_secvpfஉத்தரப்பிரதேச மாநிலத்தின் பைசாபாத்தில் இரு கண்களும் தோண்டப்பட்ட 35 வயது நபர் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டார்.

அங்குள்ள அயோத்யா ரெயில் நிலையத்திற்கருகே உள்ள சாலையில் நேற்றிரவு முகமெங்கும் ரத்தம் வழிந்த நிலையில் அந்த நபர் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டார். சுயநினைவிழந்து காணப்பட்ட அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து அப்பகுதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

அப்போது அவர் ஜார்கண்டின் கிரிடி மாவட்டத்தில் வசித்து வரும் கிருஷ்ண தேவ் வர்மா என்பது தெரிய வந்தது. தற்போது இவ்வழக்கு குற்றப் புலனாய்வுத் துறை போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இது குறித்து மூத்த காவல் கண்காணிப்பாளர் சிங் கூறுகையில், சம்பவம் நடந்த இடத்தில் வழக்கமாக ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டிய சப் இன்ஸ்பெக்டர் தனது பணியில் அலட்சியமாக இருந்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதே சமயம் உள்ளூர் வாசிகள் சந்தேகப்படுவது போல், இது மனித உறுப்புகளை திருடி விற்கும் கும்பலின் வேலையாக இருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பீகாரில் வயல்வெளியில் மலம்கழிக்க சென்ற பெண்ணின் நாக்கை துண்டித்த விவசாயி!!
Next post திருவட்டார் அருகே திருமணம் ஆன 3–வது நாளில் வாலிபருடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்!!