பீகாரில் வயல்வெளியில் மலம்கழிக்க சென்ற பெண்ணின் நாக்கை துண்டித்த விவசாயி!!

Read Time:1 Minute, 26 Second

94a531bd-7313-4d57-ba95-1711fa191c24_S_secvpfபீகாரில் வயல்வெளியில் மலம்கழித்த பெண்ணின் நாக்கை வயலுக்கு சொந்தக்காரரான விவசாயி துண்டித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது வைசாலி மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள சக்யாஷ் கிராமத்தைச் சேர்ந்த பெண்மணி குஸ்மா தேவி. இவர் நேற்று காலை மலம் கழிப்பதற்காக அருகில் உள்ள வயல்வெளிக்குச் சென்றுள்ளார்.

அப்போது என்னுடைய வயலுக்குள் எப்படி மலம்கழிக்க வரலாம் என்று அந்த வயலுக்கு சொந்தக்காரரான பகவத் பஸ்வான் குஸ்மா தேவியை அடித்து உதைத்ததுடன் அவரது நாக்கையும் துண்டித்துள்ளார்.

இதுகுறித்து குஸ்மா தேவியின் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசாரின் விசாரணையில் ஏற்கனவே இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்பகை இருந்ததாகவும், அதன் காரணமாகவே இந்த சம்பவம் நடைபெற்றதாகவும் தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓகே கண்மனி அந்தப் படத்தின் 2ம் பாகமா?
Next post ரெயில் நிலையம் அருகே கண்கள் தோண்டப்பட்ட நிலையில் கிடந்த மனிதர்!!