திருவட்டார் அருகே திருமணம் ஆன 3–வது நாளில் வாலிபருடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்!!

Read Time:5 Minute, 14 Second

875a4af4-68d5-413b-9d6f-28edca57783f_S_secvpfதிருவட்டார் அருகே உள்ள மூவாற்றுமுகத்தைச் சேர்ந்தவர் பிரைட்சிங் (வயது 33). இவர் வெளிநாட்டில் கட்டிட வேலை பார்த்து வந்தார். இவருக்கும், சிதறால் பகுதியைச் சேர்ந்த ஷைனி (24) என்ற பெண்ணுக்கும் கடந்த 31–ந் தேதி திருமணம் நடந்தது.

நேற்று பிரைட்சிங்கும், ஷைனியும் மட்டும் இருந்தனர். திடீரென ஷைனி, பிரைட்சிங்கின் செல்போனை எடுத்து பேசினார். அதை பார்த்த பிரைட்சிங் யாரிடம் பேசுகிறாய் என கேட்டார். தனது உறவினர் ஒருவரிடம் பேசுவதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் அவர் நம்மை பார்க்க வருவார் எனவும் ஷைனி கூறினார்.

இதை நம்பிய பிரைட்சிங், ஷைனியின் உறவினரை வரவேற்க தயாராக இருந்தார். ஷைனியும் புது சேலை கட்டி, தலையில் பூ வைத்து தன்னை அலங்கரித்து இருந்தார். அப்போது திடீரென வீட்டு முன்பு ஒரு வாலிபர் மோட்டார்சைக்கிளில் வந்து நின்றார். கண்ணிமைக்கும் நேரத்தில் வீட்டில் மறைத்து வைத்திருந்த ஒரு பையை எடுத்துக்கொண்டு ஷைனி அந்த வாலிபரின் மோட்டார்சைக்கிளில் ஏறினார்.

இதை சற்றும் எதிர்பாராத பிரைட்சிங், ஓடிச் சென்று ஷைனியை தடுத்தார். சேலையை பிடித்து இழுத்து அவரை மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே இறக்க முயன்றார். ஆனால் மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர், ஷைனியுடன் வேகமாகச் சென்றார்.

திருமணம் ஆன 3 நாளில் மனைவி மற்றொருவருடன் மோட்டார்சைக்கிளில் ஏறிச் சென்றதால் பிரைட்சிங் அதிர்ச்சியில் உறைந்து போனார். பின்னர் ஷைனி ஓடியது குறித்து திருவட்டார் போலீசில் பிரைட்சிங் புகார் கொடுத்தார்.

புகாரில் எனது மனைவி ஷைனியை மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் கடத்திச் சென்றுவிட்டார். ஷைனி கடத்தப்படும்போது திருமணத்தின்போது வரதட்சணையாக போடப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கப்பணம், நான் அவர் கழுத்தில் கட்டிய 7 பவுன் தாலிச் செயின் ஆகியவற்றையும் எடுத்துச் சென்றுவிட்டார். எனவே அந்த வாலிபரிடம் இருந்து எனது மனைவியை மீட்டு என்னிடம் ஒப்படைப்பதுடன், நகை, பணத்தையும் மீட்க வேண்டும்’ என கூறி இருந்தார்.

இதுபற்றி திருவட்டார் போலீசார் நடத்திய விசாரணையில் ஷைனிக்கு திருமணத்துக்கு முன்பே களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் இருந்ததும், அந்த வாலிபருடன் தான் தற்போது ஷைனி ஓட்டம் பிடித்து இருப்பதும் தெரியவந்தது.

ஷைனியை அழைத்துச் சென்ற வாலிபருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அது தெரிந்த பிறகும் அந்த வாலிபருடன் ஷைனி பழகி உள்ளார். மேலும் ஒரு மாதத்துக்கு முன்பு அந்த வாலிபருடன் அவர் ஓட்டமும் பிடித்துள்ளார். இதுபற்றி வாலிபரின் மனைவி களியக்காவிளை போலீசில் புகார் செய்தார். போலீசார் ஷைனியையும், வாலிபரையும் மீட்டு எச்சரித்துள்ளனர். அப்போது 2 பேருமே இனிமேல் நாங்கள் தொடர்பு வைத்து கொள்ள மாட்டோம் என போலீசாரிடம் எழுதிக் கொடுத்து விட்டு பிரிந்துள்ளனர்.

அதன்பிறகே ஷைனிக்கு பெற்றோர் வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் ஷைனி அந்த வாலிபரை மறக்க முடியாமல் இருந்துள்ளார். பெற்றோர் வற்புறுத்தல் காரணமாக பிரைட்சிங்கை திருமணம் செய்து கொண்டு தற்போது அதே வாலிபருடன் மீண்டும் ஓட்டம் பிடித்துள்ளார்.

பிரைட்சிங் அளித்த புகாரின் பேரில் ஷைனியையும், அந்த வாலிபரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரெயில் நிலையம் அருகே கண்கள் தோண்டப்பட்ட நிலையில் கிடந்த மனிதர்!!
Next post திருப்பத்தூர் அருகே கணவன்–மனைவி வெட்டி படுகொலை: காதை அறுத்து கம்மல் கொள்ளை!!