கோவை சிறுமி பாலியல் பலாத்காரம்: தந்தை உள்பட 4 பேர் கைது!!
கோவையை சேர்ந்தவர் ஏசுதாஸ் (வயது 57). இவரது மகள் சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது ). 12 வயது இவரை ஏசுதாஸ் கடந்த 2011–ம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.
இதுகுறித்த தகவலறிந்த ஏசுதாசின் உறவினர்களான பிரேம் குமார் (19), ரவிக்குமார் (என்கிற) ஸ்டேன்லி (27) மற்றும் பாலன் (எ) பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேரும் சிறுமி சாந்தியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்தனர்.
இது குறித்து சிறுமி உக்கடத்தில் உள்ள குழந்தைகள் நல அமைப்பினரிடம் தகவல் தெரிவித்தார். அவர்கள் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமி சாந்தியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது தந்தை ஏசுதாஸ் மற்றும் பிரேம் குமார், ரவிக்குமார், பாலன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைதானவர்களை போலீசார் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating