நெல்லை அருகே உடலில் மின்சாரம் பாய்ச்சி மாணவர் தற்கொலை!!
நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள வெய்க்காலிப்பட்டி நைனார்கோவில் தெருவை சேர்ந்தவர் ராமநாடார் (வயது 45) விவசாயி. அவருடைய மகன் குமார் (18). ஆவுடையானூரில் உள்ள ஒருமேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
கடந்த 2 மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், சரியாக பள்ளிக்கு செல்ல முடியாமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் குமார் நேற்று முன்தினம் வீட்டில் உள்ளவர்களிடம், கோவிலுக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில் நேற்று காலை அவர்களுக்கு சொந்தமான தோட்டத்தின் பம்பு செட்டு கிணற்றில், குமார் இரும்பு கம்பியை தனது உடலில் சுற்றி, அதில் மின்சாரத்தை பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று குமாரின் உடலை கைப்பற்றி தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் இருதயராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating