வாய்த் தகராறு முற்றியதால் நேருக்கு நேர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இரு போலீசார் பலி!!

Read Time:1 Minute, 26 Second

f4c4e51d-3379-491b-90dc-06c50cf6892d_S_secvpfமத்தியப் பிரதேசம் மாநிலம், திக்காம்கர் மாவட்டத்தில் போலீசார் இருவருக்குள் ஏற்பட்ட வாய்த் தகராறில் இருவருமே ஒருவரையொருவர் துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்குள்ள பிரிதிவிபூர் காவல் நிலையத்தில் துணை வட்டார போலீஸ் அதிகாரியாக பதவி வகித்து வருபவர் கே.சி. மாலிக். இதே காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் பிரமோத் சக்கரவர்த்தி என்பவருக்கும் மாலிக்குக்கும் இடையே தனிப்பட்ட பிரச்சனை தொடர்பாக இன்று வாய்த் தகராறு ஏற்பட்டது.

வாய்த் தகராறு முற்றி கைகலப்பாக உருவெடுத்தபோது, இருவருமே தங்களது பாதுகாப்புக்காக வைத்திருந்த கைத்துப்பாக்கிகளை உருவியபடி ஒருவரையொருவர் குறி பார்க்க தொடங்கினர். இருவரின் துப்பாக்கிகளில் இருந்தும் பாய்ந்த தோட்டாக்களுக்கு மாலிக்கும், பிரமோத் சக்கரவர்த்தியும் பலியாகினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வயலில் வேலைப்பார்த்த இளம்பெண்ணை தூக்கிச் சென்று கற்பழித்த வாலிபர்!!
Next post வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்யவும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கவும்!!