வயலில் வேலைப்பார்த்த இளம்பெண்ணை தூக்கிச் சென்று கற்பழித்த வாலிபர்!!
Read Time:1 Minute, 25 Second
அரியானாவில் உள்ள ஜிந்த் மாவட்டத்தின் துமேர்கா கிராமத்தில் வயல்வெளியில் வேலைப்பார்த்த பெண்ணை பக்கத்து வயலுக்கு தூக்கிச் சென்று கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜிந்த் மாவட்டத்தில் உள்ள துமேர்கா கிராமத்தில் 20 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் வயல்வெளியில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது துமேர்கா கிராமத்தைச் சேர்ந்த சோனு என்பவரும், தாம்ப்டன் கிராமத்தைச் சேர்ந்த ஷிலா என்பவரும் அங்கே வந்தனர்.
அவர்கள் வந்ததை கவனிக்காமல் அந்த இளம்பெண் வேலைப்பார்த்துக் கொண்டிருந்தார். இருவரும் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக அருகில் மற்றொரு வயல்காட்டிற்கு தூக்கிச் சென்றனர். அங்கு வைத்து அவர்களில் ஒருவர் அந்த பெண்ணை கற்பழித்துள்ளார்.
இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி போலீசார் ஷிலாவை கைது செய்தனர். சோனுவை தேடிவருகிறார்கள்.
Average Rating