செய்யாறு அருகே கணவனை தாக்கிய மனைவி உள்பட 3 பேர் கைது!!
Read Time:1 Minute, 14 Second
செய்யாறு தாலுகா நர்மபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 40). இவர் தனக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்து ரூ.10 லட்சம் பணத்தை அவரது மனைவி சுமதி பெயரில் வங்கியில் டெபாசிட் செய்தார்.
அந்த பணத்தை சுமதி கணவருக்கு தெரியாமல் எடுத்து அவரது தாயார் வீட்டில் கொடுத்துள்ளார்.
இதுபற்றி தகவலறிந்த ரத்தினம் மனைவியிடம் பணம் குறித்து கேட்டுள்ளார்.
இதனால் ஏற்பட்ட தகராறில் சுமதி அவரது தாயார் சகுந்தலா, உறவினர்கள் ராஜேந்திரன், சிவக்குமார் ஆகியோர் சேர்ந்து ரத்தினத்தை தாக்கினர். படுகாயம் அடைந்த அவர் வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுபற்றிய புகாரின் பேரில் அனக்காவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுமதி, சகுந்தலா ராஜேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். சிவக்குமாரை தேடி வருகின்றனர்.
Average Rating