சென்னை நர்சு காதலனுடன் ஓட்டம்: மணப்பெண் சகோதரிக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!!

Read Time:3 Minute, 57 Second

8e962a58-8a1b-4d30-8bf2-182f51cc0e17_S_secvpfதிருவட்டாரை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், நாகர்கோவிலை அடுத்த இறச்சகுளம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெற்றோர் திருமணம் பேசி நிச்சயதார்த்தம் செய்தனர்.

அவர்களின் திருமணம் இறச்சகுளத்தில் இன்று நடப்பதாக இருந்தது. அந்த பெண் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தார்.

திருமணத்துக்காக 2 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார். அவருடன் வாலிபர் ஒருவரும் இருந்தார். அந்த வாலிபர் தன்னுடன் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் நண்பர் என்று அந்த பெண் பெற்றோரிடம் அறிமுகம் செய்தார். அவரும் பெண்ணின் வீட்டில் நடந்த திருமண ஏற்பாடுகளில் உற்சாகமாக பங்கெடுத்தார்.

நேற்று மாலை மணமகனின் உறவினர்கள் மணப்பெண் வீட்டில் நடந்த சடங்குகளுக்கு வந்தனர். அப்போது மணப்பெண்ணின் நண்பரும் சடங்கில் பங்கேற்று ஓடியாடி வேலை பார்த்தார். சடங்குகள் முடிந்து அனைவரும் திரும்பி சென்றனர். அதன்பிறகு மணமகளின் பெற்றோர் திருமண மண்டபத்தில் விருந்துக்கான சமையல் ஏற்பாடுகளில் மூழ்கினர்.

மணப்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அதிகாலை 2 மணி அளவில் மணப்பெண்ணின் தந்தை திருமண மண்டபத்தில் இருந்து வீட்டுக்கு வந்தார். அப்போது மணப்பெண்ணின் அறை திறந்து கிடந்தது. அவருடன் வந்த வாலிபரையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் தந்தை அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தார். அப்போது உறவினர் ஒருவர் மணப்பெண்ணுடன் வந்த வாலிபர் தனது மோட்டார்சைக்கிளை வாங்கி சென்றதாக கூறினார்.

அதன்பிறகு தான் மணப்பெண்ணும் அந்த வாலிபரும் சேர்ந்து வீட்டில் இருந்து மாயமாகி இருப்பது தெரியவந்தது.

விடிந்தால் திருமணம் என்ற நிலையில் மணப்பெண் திடீரென மாயமானது அவரது பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அவர்கள் இதனை உடனடியாக திருவட்டாரில் உள்ள மணமகனின் வீட்டாருக்கு தெரிவித்தனர். அவர்கள் திருமணத்தை நிறுத்த வேண்டாம் என்றும் மாற்று ஏற்பாடு செய்யும்படி மணப்பெண்ணின் பெற்றோரிடம் கேட்டுக்கொண்டனர்.

அதன்படி மணப்பெண்ணின் தந்தை, அவரது இளைய மகளை மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இந்த தகவல் மணமகன் வீட்டாருக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புதல் தெரிவித்தனர். இதையடுத்து இன்று காலை மணமகனும், மணப்பெண்ணின் சகோதரியும் இறச்சக்குளம் பகுதியில் உள்ள ஆலயத்தில் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்கு வந்த பின்னர் தான் வெளியூர்களில் இருந்து வந்த உறவினர்கள் பலருக்கும் மணப்பெண் மாறிய சம்பவமும், அதன் பின்னணியில் நடந்த களேபரங்களும் தெரியவந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகர் படத்தில் பாட மறுத்த நடிகர்!!
Next post வில்லி கதாபாத்திரத்திற்கு தயாரான நடிகை!!