தர்மபுரி மாவட்டத்தில் 14 போலி டாக்டர்கள் கைது!!
Read Time:1 Minute, 9 Second
தர்மபுரி மாவட்டத்தில் டாக்டருக்கு படிக்காமல் பலர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தி போலி டாக்டர்களை கைது செய்ய போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.
அதன்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் நேற்று ஒரே நேரத்தில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது பாலக்கோடு, ஏரியூர், அரூர், தொப்பூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் டாக்டருக்கு முறையாக படிக்காமல் சிகிச்சை அளித்து வந்த 14 போலி டாக்டர்களை போலீசார் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கை மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating