விடுதியில் தங்கி படித்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காண்காணிப்பாளர்!!
சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள பிஜப்பூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமிக்கு விடுதி கண்காணிப்பாளர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிஜப்பூர் மாவட்டத்தில் அரசால் நடத்தப்படும் உண்டு உறைவிட மாதிரி பள்ளியின் விடுதியில் துளசிராம் யாலம் (வயது 38) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் அந்த விடுதியில் தங்கி 7-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கு கடந்த டிசம்பர் மாதம் முதல் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
மேலும், இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் இவரது தொந்தரவு எல்லை மீறவே, அந்த சிறுமி தன்னுடன் தங்கியிருக்கும் தோழிகளிடம் கூறியிருக்கிறார். ஆனால், ஒருவருக்கும் கண்காணிப்பாளரை எதிர்த்து பேச தைரியம் இல்லை.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த சிறுமியின் அத்தை அவரை பார்க்கச் சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமையை கூறி கதறியுள்ளார். உடனே, அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து பாலியல் குற்றங்களில் இருந்து சிறுமிகளை பாதுகாக்கும் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், துளசிராமை தேடிவந்தனர். இதனையறிந்த துளசிராம் தலைமறைவாகிவிட்டார்.
Average Rating