ஓநாய் போல் விசிலடித்து கேலி செய்த இளைஞருக்கு செருப்படி கொடுத்த பெண்கள்!!
மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள சேந்த்வாவில் பெண்களை விசிலடித்து கேலி செய்த விராத் தோனி என்ற இளைஞருக்கு செருப்படி கொடுக்கப்பட்டது.
23 வயதான விராத் தோனி என்ற அந்த நபர், பள்ளிக்கு சென்று கொண்டிருந்த இளம்பெண்களை பார்த்து பூனை என்று நகைப்பு செய்ததுடன், ஓநாய் போன்று விசில் அடித்தும் கேலி செய்துள்ளார். இதனால் கோபமடைந்த அப்பெண்கள் அந்நகர காவல்துறை சப்-இன்ஸ்பெக்டரான மோனிகா சிங்கிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர், சம்பவம் நடந்த இடத்திலேயே தோனிக்கு வித்தியாசமான தண்டனை கொடுத்தார். அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பதிலாக, பாதிக்கப்பட்ட பெண்களை வைத்து அவரது முதுகில் செருப்பால் அடிக்க வைத்தார்.
கேலிக்குள்ளான பெண்கள் நான்கு பேரும் தோனியை குனியவைத்து அவனது முதுகில் மாற்றி மாற்றி செருப்பால் நையப்புடைத்தனர். இச்சம்பவத்திற்கு பின் அங்குள்ள நீதிபதிகளிடம் சென்ற தோனி, பொது இடத்தில் தன்னை அடித்தது குறித்து புகார் செய்தார். ஆனால் நீதிபதிகளோ அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை சரி தான் என்று கூறியதுடன் அவரது புகாரையும் ஏற்றுக்கொள்ள மறுத்தது குறிப்பிடத்தக்கது.
Average Rating