நான்காவது மாடியிலிருந்து விழுந்தும் காயங்களின்றி உயிர் பிழைத்த 4 வயது பெண் குழந்தை!!
குஜராத்தின் வல்சாத் நகரில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றின் 4 ஆவது மாடியிலிருந்து, விழுந்த பெண் குழந்தை பெரிய காயங்கள் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.
மகி தேசாய் என்ற அந்த குழந்தை, கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி தனது தாத்தா பாட்டியின் மேற்பார்வையில் 4 ஆவது மாடியின் மேல் தளத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள். எதிர்பாராதவிதமாக சிறிய சுற்றுச்சுவரைத் தாண்டி திடீரெனக் கீழே விழுந்து விட்டாள். இதைப் பார்த்து பதறிப் போன ஒருவர் வேகமாக ஓடி வந்து குழந்தையை தூக்கினார்.
50 அடி உயரத்திலிருந்து வந்த குழந்தை மகி தேசாய் பிளாஸ்டிக் மேற்கூரையின் மீது விழுந்ததால் பின்பகுதியில் ஒரு சின்ன எலும்பு முறிவோடு பெரிய காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினாள்.
இந்த சம்பவம் குறித்து பேசிய மகியின் அப்பா ஹேமந்த் தேசாய், “என் ஒரே மகளான மகிக்கு இது இரண்டாவது பிறப்பு. இது ஒரு அதிசயம்” என்று நெகிழ்ந்தார்.
Average Rating