உடன்குடி அருகே முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் ரூ.2 லட்சம் நகை திருட்டு!!

Read Time:1 Minute, 37 Second

4c82f962-99f9-4c4b-babf-9830533a98c9_S_secvpfதூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள தேரியூரை சேர்ந்தவர் தர்மராஜ், ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவரது மனைவி பிரம்மசக்தி (வயது 50).

நேற்று மாலை இவர் வீட்டில் உள்ள குப்பைகளை அங்குள்ள காட்டுப்பகுதியில் கொட்ட சென்றார். பின்னர் குப்பைகளை கொட்டி விட்டு வீட்டிற்கு நடந்து வந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2மர்மநபர்கள் , பிரம்மசக்தியிடம் ஒரு முகவரியை காட்டி, அங்கு எப்படி செல்ல வேண்டும் என்று கேட்டனர். பிரம்மசக்தி முகவரியை கூறும் போது 2பேரும் அவரது கழுத்தில் கிடந்த 11 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பியோடிவிட்டனர்.அதன் மதிப்பு ரூ.2.25 லட்சம் இருக்கும்.

இது குறித்து குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி பைக்கொள்ளையர்களை தேடி வருகின்றனர். உடன்குடி பகுதியில் கடந்த சில மாதங்களாக பைக் கொள்ளையர் அட்டகாசம் நீடித்து வருகிறது. எனவே அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிழக்கு தாம்பரத்தில் கஞ்சா விற்பனை செய்த மூதாட்டி கைது: கஞ்சா பறிமுதல்!!
Next post நான்காவது மாடியிலிருந்து விழுந்தும் காயங்களின்றி உயிர் பிழைத்த 4 வயது பெண் குழந்தை!!